காவிரி ஆற்றின் கடைசி கதவணைக்கு காவிரி நீர் வந்தடைந்தது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி காவேரி நீரை வணங்கி வரவேற்றனர்
பூம்புகார், ஜுன்-24;
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே மேலையூரில் அமைந்துள்ள காவிரி ஆற்றின் கடைசி கதவணையை வந்தடைந்தது காவிரி நீர்.
குடகு மலையில் உருவாகும் காவேரி ஆறு பல்லாயிரம் மையில்கள் கடந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகாரில் கடலில் சங்கமிக்கும் இடத்தில் கலக்கும். அதற்கு முன்னர் மேலையூர் கிராமத்தில் காவிரி ஆற்றின் கடைசி கதவணை அமைந்துள்ளது.
காவேரி தண்ணீர் இக்கதவணையை வந்தடைந்த பின்னர் தேக்கி வைத்து ஓவ்வொரு பாசன ஆறுகள் மற்றும் கிளை வாய்க்கால்களுக்கும், பெருந்தோட்டம் ஏரிக்கும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், 12 ம் தேதி மேட்டூரில் இருந்து தமிழக முதல்வரால் திறக்கபட்ட தண்ணீர் காவேரியின் கடைமடை பகுதியான மேலையூர் உள்ள கடைசி கதவணைக்கு வந்தடைந்தது. அப்போது அங்கு காத்திருந்த விவசாயிகள் பூஜையில் செய்து காவேரி தண்ணீரை மலர்தூவி வணங்கி வரவேற்றனர். மேலும் முறை வைக்காமல் தொடர்ந்து தண்ணீர் வழங்கவும், சம்பா சாகுபடிக்கான உழவு மானிய திட்டத்தை அறிவிக்க தமிழகர அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரா. யோகுதாஸ்,
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர்.